தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை, உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 26ம் தேதி, தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும்,  27ம் தேதி, வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல், வருகின்ற 28ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற  28ம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு   அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்