பப்ஜி மதன் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை - வாங்கி குவித்த சொத்துகள் குறித்து கேள்வி

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி அதனை இணையத்தில் பதிவேற்றியதோடு, சிறுமிகள், பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் முதற்கட்டமாக மதனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதன் மீது இதுவரை 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் இதுவரை சேர்த்த சொத்துகள் எங்கே உள்ளது? பினாமி கணக்குகள் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்வியும் முன்வைக்கப்படலாம் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்