பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து
x
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின்
இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதை, தமது அறிக்கையில் அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.

 பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம், திமுகவின் சாயம் வெளுத்து விட்டதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்