2019 -20 உயர்கல்வித் துறை ஆண்டறிக்கை - விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்
பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
2019 - 2020ம் ஆண்டுக்கான உயர்கல்வித்துறை ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், உயர்கல்வித் துறை ஆசிரியர் நியமனத்தில், எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் இஸ்லாமிய மகக்ளின் பங்களிப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனை கண்டிப்பதாக கூறியுள்ள அவர், இந்த அநீதியை களையும் வகையில் சிறப்பு பணியமர்த்தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
Next Story