தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை 92 லட்சத்து 69 ஆயிரம் டோஸ்கள் வழங்கியுள்ளது. இதேபோல், தமிழக அரசு நேரடியாக 13 லட்சத்து 95 ஆயிரம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது.தமிழகத்திற்கு மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 3 லட்சத்து 26 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும், ஜூன் மாத ஒதுக்கீடாக மத்திய அரசு வழங்க உள்ள 42 லட்சம் தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்