தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாவட்டங்களின் நிலவரங்கள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாவட்டங்களின் நிலவரங்களை தற்போது பார்க்கலாம்.
x
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் ஒரே நாளில் 1 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, 18 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 27பேர் உயிரிழந்துள்ளனர். கோவைக்கு அடுத்த படியாக ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஆயிரத்து 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, 11 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1893 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, 9 ஆயிரத்து 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் புதிதாக 894 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து 9 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1777 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து 16ஆயிரத்து 567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.







Next Story

மேலும் செய்திகள்