"தொற்றை ஒழித்துவிட்டு முகம் காண வருவேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், நாளை முதல், திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
x
தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், நாளை முதல், திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். இந்த பயணம் முழுவதும் அரசு சார்ந்த பணி என்பதால், தொண்டர்கள் நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம் என் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார். கடமை'யை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், 'கண்ணிய'மிக்க செயல்பாடு என்பது, நீங்கள் 'கட்டுப்பாடு' காப்பதுதான் என கூறியுள்ளார்.பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ள ஸ்டாலின், பொறுத்திருப்போம் காலம் விரைவில் மாறும் என்று கூறியுள்ளார்.நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு, உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என தொண்டர்களுக்கு எழுதிய கடித்ததில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்