டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சமூக வலைதளங்களில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைக் கொண்டு வந்தது. இந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மத்திய அரசின் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரம் மற்றும் தனி உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்