"நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
x
"நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடிதம்  
 
நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கிராமப்புற மாணவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதால், பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்பது மற்றும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை கொண்டு வரக்கூடாது என 2011லேயே ஜெயலலிதா வலியுறுத்தியதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்