கோவையில் கொரோனா தடுப்பு தீவிரம் - தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
x
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில், கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர், கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும்,  ஆலோசிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்