"எப்படி பணிமாற்றம் வாங்கி வந்தாய்..." மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர்

கடலூர் அருகே அரசு மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எப்படி பணிமாற்றம் வாங்கி வந்தாய்... மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர்
x
கடலூர் அருகே அரசு மருத்துவரை தாக்கிய தலைமை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 31 வயதான விக்ரம், மருத்துவராக பணிபுரிந்த வருகிறார். அவர் பணியில் இருந்தபோது, அங்கு வந்த எள்ளேரி வட்டார மருத்துவர் குணபாலன், அரசு ஓட்டுனர் பாலமுருகன், மருந்து தெளிக்கும் சிவா ஆகிய மூவரும் சேர்ந்து,  விக்ரமை  கட்டையால், தாக்கியுள்ளனர். இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ள பொதுமக்கள்  மூவரையும் பிடித்து குமராட்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விக்ரம் அளித்த புகாரில், வட்டார மருத்துவர் குணபாலன்,தன்னை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பணியமர்த்தி வந்ததாக கூறியுள்ளார். இதனால் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து, மீண்டும், பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை மருத்துவர் குணபாலன், என்னை மீறி எப்படி மேல் அதிகாரியிடம் சென்று பணி மாறுதல் வாங்கி வந்தாய் என கூறி தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து 3 பேர் மீது, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்