மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் மஞ்சள் ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது.
மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரிநீர் மஞ்சள் ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது. கோடையில் பெய்த மழையால் மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவான 57 அடியில், 53 அடி அளவிற்கு தண்ணீர் ஏற்கெனவே நிரம்பியிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று 55 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து 192 கன அடி உபரி நீர், அணையின் 4 மதகுகள் மூலம்  மஞ்சள் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு கோடையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்