டோக்கன் வாங்க திரண்ட கூட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

சிவகங்கை அடுத்த வாணியங்குடி ரேசன் கடையில், டோக்கன் வாங்க அதிகாலை முதலே கூடிய கூட்டத்தினர் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
x
சிவகங்கை அடுத்த வாணியங்குடி ரேசன் கடையில், டோக்கன் வாங்க அதிகாலை முதலே  கூடிய கூட்டத்தினர் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் மளிகை சாமான்கள் வழங்கும் நிகழ்வு  தொடங்கப்பட்டது. அதிகாலை முதலே டோக்கன் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்த நிலையில், அங்குவந்த ரேசன் கடை ஊழியரிடம் டோக்கள் பெற முண்டியடித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை எச்சரித்த ரேஷன்  ஊழியர்கள், வரிசையில் நிற்க அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்