மருத்துவ உயர்படிப்பு : பிஜி நீட் தேர்வு - மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு
மருத்துவ உயர்படிப்பிற்கான, முதல்நிலை நீட் தேர்வு மேலும், 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றை, சமாளிக்க, மருத்துவ பணியாளர்களை அதிகரிப்பது தொடர்பாக, பிரதமர் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் படி, கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பிஜி நீட் தேர்வு, மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்னர் தேர்வு நடைபெறாது என்றும், தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story