"இன்று மாலைக்குள் தேர்தல் பணிகள் நிறைவு"- சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
x
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 234 தொகுதிகளிலும், வெற்றி பெற்றவர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறினார். மேலும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் பணிகள் நிறைவு பெற்ற பின் அறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்