மே 2 வாக்கு எண்ணிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மே 2 வாக்கு எண்ணிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும்

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்

அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்களின் பட்டியலை மூன்று நாட்களுக்கு முன்னதாக தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கையின் போது, மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து முறையான திட்டத்தை உருவாக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்