டோக்கன் விநியோகத்தில் சர்ச்சை - பாஜக பிரமுகர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், பா.ஜ.க. வேட்பாளர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
டோக்கன் விநியோகத்தில் சர்ச்சை - பாஜக பிரமுகர் வீடு முன் பெட்ரோல்  குண்டு வீச்சு
x
பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் வீடு முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், பா.ஜ.க. வேட்பாளர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலை, ரமணா நகரில் உள்ள தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் அருணை ஆனந்தன் வீடு முன் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து அருணை ஆனந்தன், போலீசில் புகார் அளித்தார். அப்போது, தேர்தலின் போது, டோக்கன் விநியோகம் செய்ததை தாம் தடுத்ததாகவும், குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக, பா.ஜ.க. இளைஞரணி செயலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த வழக்கில், தற்போது பா.ஜ.க. வேட்பாளர் தணிகைவேல், சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குண்டு வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்