ஆர்.எஸ்.பாரதி மீதுஅவதூறு வழக்கு - விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ,தி.மு.க .அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
2015  நவம்பர் 2 -ல் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொது க்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக   வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது எம்.பி எம்.எல்.ஏ க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு,  இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும்  ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதி, அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை ஜூன் 15-க்கு ஒத்தி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்