பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் - இரும்பு கம்பியால் அடித்து ஒருவர் கொலை

மதுபோதையில் நண்பன் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம்  - இரும்பு கம்பியால் அடித்து ஒருவர் கொலை
x
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 42 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் குடிபோதைக்கு அடிமையான ராஜ்குமார் வேலைக்கு போகாமல் தன் நண்பர்களுடன் குடித்து பொழுதை கழித்து வந்துள்ளார். தனது நண்பர்களை வீட்டுக்கே வரவழைத்து மது அருந்துவதால் இவரின் தாய் பக்கத்து தெருவில் உள்ள மகளின் வீட்டில் தங்கி உள்ளார். 
சம்பவத்தன்று தன் அண்ணன் நீண்ட நேரம் கதவை திறக்காததை அறிந்த தங்கை, வீட்டுக்கு வந்து பார்த்த போது தலையில் பலத்த ரத்த காயங்களுடன் ராஜ்குமார் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது ராஜ்குமாருடன் கடைசியாக பேசியவர் அசாருதீன் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது தான் உயிரிழந்த ரா​ஜ்குமாரின் நண்பர் தான் அசாருதீன் என தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது அசாருதீனுக்கு ராஜ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் கோபமடைந்த அவர் இரும்பு கம்பியை எடுத்து அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அசாருதீனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்