விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பெண்கள் உள்பட 4 பேர் காயம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, விருதுநகர் அடுத்த சதானந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் வெடிபொருள் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 30க்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று மாலை வழக்கம் போல், வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணி நடந்துள்ளது. அதை பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட உராய்வில் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், 35 வயது ஆதிலட்சுமி, முத்துமாரி, செந்தி அம்மாள் ஆகிய 3 பெண்கள் மற்றும் சுந்தரபாண்டி ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே, மேல்சிகிச்சைக்காக, செந்தி அம்மாள், முத்துமாரி சுந்தரபாண்டி ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story