வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
x
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை, காஞ்சிபுரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல சுற்றுலா வேன்கன் வரவழைக்கப்பட்டிருந்தன. இதை கண்ட திமுக வேட்பாளர் தா.மோ. அன்பரசன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், சுற்றுலா வேனில் ஏற்றி செல்வது பாதுகாப்பானது கிடையாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், பேச்சுவார்தை நடத்தி பலத்த பாதுகாப்புடன் வேனிலேயே எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், சுமார் 4 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்