அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்
x
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதிமுக பாஜகவுடனா தொகுதி பங்கீடு குறித்த  முதற்கட்ட பேச்சுவார்த்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியும், பாஜக சார்பில் மாநில தலைவர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி கட்ட முடிவு எடுக்கப்பட வில்லை. இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்