ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் விபரீதம் - 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து

செல்போனில் ப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஃப்ரீ ஃபயர் விளையாட்டால் விபரீதம் - 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து
x
செல்போனில் ப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் 2 இளைஞர்களுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் மேலத்தெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் நவீன் செல்போனில் ஃபிரீ ஃபயர் என்ற கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இவர்களது கேம் ஐடியை கூடங்குளம் கீழத்தெருவை சேர்ந்த சூர்யா என்பவர் ஹேக் செய்த‌தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நவீன் மற்றும் சூர்யபிரகாஷ் இருவரும் சூர்யாவிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த சூர்யாவின் உறவினர் வெற்றிவேல் சூர்யபிரகாஷ் மற்றும் நவீனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கழுத்து, முதுகு பகுதிகளில் கத்தி குத்து காயங்களுடன் இளைஞர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடங்குளத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்