மதுரையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம்... செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பலியான சம்பவத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம்... செயற்கை முறையில் மூச்சு திணறடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
x
உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பலியான சம்பவத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உசிலம்பட்டி அருகே  கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 5 பேர் கொண்ட குழு முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு செயற்கையாக மூச்சு திணறல் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இந்த அறிக்கையும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதால் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்