தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு தமிழிசை சௌந்தராஜனிடம் வழங்கப்பட்டது.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்
x
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூடுதல் பொறுப்பாக அதனை கவனிப்பார் என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம், குடியரசு தலைவரின் ஆணையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகை கமிஷனர் வழங்கினார். இந்நிலையில் அவர் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்