பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய பா.ஜ.க அரசு, எரிபொருள் எண்ணெய், எரிவாயு விலையை உயர்த்தி, மக்களக்கு  கொடூரப் பரிசு அளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், அதை கணக்கில் கொள்ளாமல் அரசு செயல்படுவதாகவும், இதன் விளைவால் பெட்ரோல் விலை 'செஞ்சுரி' அடிக்கப்போவதாகவும், டீசல் விலை அதனைப் பின் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் கருதி, வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்