பெட்ரோலில் 10% எத்தனால் விவகாரம் : பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து வினியோகிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
x
பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலந்து வினியோகிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாகனத்தை கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இதில் கவனமுடன் இருக்க வேண்டும் சிறிது நீரை ஈர்த்தால் கூட, பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதியில் எத்தனால் நீராக மாறி, வாகனத்தை இயக்க முடியாத சூழல் ஏற்படும் வாகன டேங்குகளில் சேர்ந்த நீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பாவார்கள் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்