தஞ்சையில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு - அதிரடி

சீன கடன் செயலிகளை போலவே அதிக வட்டிக்கு கடன் வழங்கி துன்புறுத்தியதாக 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
x
சீன கடன் செயலிகளை போலவே அதிக வட்டிக்கு கடன் வழங்கி துன்புறுத்தியதாக 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கர்நாடக மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  E PUPEE , KREDIT BEE செயலிகள் மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் CASH BEEN செயலிகள் மீது திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் விவேக் என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் பெயரில், மூன்று கடன் செயலிகள் மீதும் தனித்தனி வழக்குகள் திருவையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடன் கொடுப்பதற்கு முன்பாக கடன் பெறுவோரின் பேஸ்புக் கணக்குகள், அவரின் நண்பர்கள் குறித்து சோதனை செய்த பிறகே கடன் வழங்கியதாகவும், வட்டி கட்டாததால் அவரின் நண்பர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்