சீர்காழி கொலை சம்பவம்: அரிவாளுடன் ஆக்ரோஷமான பேச்சு - மன்னிப்பு கேட்டு மீண்டும் வீடியோ

நாகர்கோவிலில் கையில் அரிவாளுடன் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீர்காழி கொலை சம்பவம்: அரிவாளுடன் ஆக்ரோஷமான பேச்சு - மன்னிப்பு கேட்டு மீண்டும் வீடியோ
x
சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்த நிர்மல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கொலையாளிளுக்கு இப்படி தண்டனை  கொடுக்க வேண்டும் என கையில் அரிவாளுடன் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வந்த நிலையில் அவரை போலீசார் தேடி வந்ததால் நிர்மல் மாயமானார். இதனிடையே உணர்ச்சிவசப்பட்டு வீட்டில் தேங்காய் வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து வீடியோ பதிவிட்டேன் என்றும் காவல்துறையும், நீதித்துறையும் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும்  மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.... 


Next Story

மேலும் செய்திகள்