தேவாலயம் அருகே மாதா சிலை உடைப்பு
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மாதா சிலை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மாதா சிலை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நற்கருணை தேவாலயம் செல்லும் வழியில் உள்ள மாதா சிலையை, இரவு நேரத்தில் மர்மநபர் கம்பியை வைத்து அடித்து உடைத்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டதும் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய நபரை தேடி வருகின்றனர்..
Next Story