போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில், 9 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் 70 லட்சத்து 26 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்