சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
x
சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது. 

இன்று கர்நாடகா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்திருப்பதாகவும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இயல்புநிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரத்தத்தில் சர்க்கரை அளவு 198ல் இருந்து 205ஆக அதிகரித்திருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  எனினும், சசிகலா சிரமமின்றி உட்காருவதாகவும், ஏதேனும் உதவியுடன் நடப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  சசிகலா இயல்பாக உணவு உட்கொள்வதாக குறிப்பிட்டுள்ள கர்நாடகா அரசு மருத்துவமனை, தொடர்ந்து அவரதின் உடல்நிலை  கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்