சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்
x
கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்...

கேரள மாநிலம் இடுக்கி அருகே மாங்குளம் பகுதியில் சிறுத்தையை ஒரு கும்பல் கொன்று சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், ஒரு பெரிய பாத்திரம் முழுக்க கறி சமைக்கப்பட்டிருப்பதை கண்டனர். ஆனால் அதன் அருகே சிறுத்தையின் தோல், பற்கள், நகங்கள் இவையெல்லாம் கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. 

உடனடியாக 5 பேர் கொண்ட அந்த கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் வேட்டையில் ஈடுபடும் கும்பல் என தெரியவந்தது.

இவர்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ள வனவிலங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் உறுதியானது. ஏற்கனவே முள்ளம்பன்றியை இவர்கள் கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் விசாரணையில் கூறியதை தொடர்ந்து வனத்துறையினர் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

சிறுத்தையை பிடிக்க திட்டமிட்ட இவர்கள், தினேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் இரும்பு கம்பியால் கூண்டு ஒன்றை தயார் செய்து வைத்துள்ளனர். இதில் கடந்த புதன்கிழமையன்று சிக்கிய சிறுத்தையை நேராக ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று கொன்று சுத்தப்படுத்தி உள்ளனர். 

பின்னர் 40 கிலோ எடை கொண்ட இறைச்சியை அவர்கள் 6 பேரும் சரிபாதியாக பிரித்துக் கொண்டு சமைத்துள்ளனர். மேலும் சிறுத்தையின் பற்கள், நகங்களை விற்பதற்காக அவர்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. 

இவற்றை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார், 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். முள்ளம்பன்றியை கொன்று சாப்பிட்டதாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை நாடவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. அவ்வாறு விசாரிக்கும் பட்சத்தில் இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற தகவல்கள் வெளியே வரலாம்.. 

வனவிலங்கு கடத்தல் மற்றும் வனவிலங்கு வேட்டை உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இந்த கும்பலின் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்