ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் வரும் வெள்ளியன்று, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜன.22-ல் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
x
2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் இன்று காலை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசி உள்ளார்.  சட்டப் பேரவை பொதுத் தேர்தல் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். அன்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தலைமை செயலகம் வருமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆலோசனையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்தும், சட்டப் பேரவை கூட்டத் தொடர், இடைக்கால பட்ஜெட், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் உடனான சந்திப்புக்கு பின்னர் நடைபெறும் ஆலோசனை என்பதால் மிகவும் எதிர்பார்ப்பை கட்சிக்குள் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்