பிள்ளைகள் தொடர்ந்து டிவி பார்த்ததால் ஆத்திரம் - மாமியார் வீட்டுக்கு நெருப்பு வைத்த போலீஸ்காரர்

குழந்தைகள் தொடர்ந்து டிவி பார்த்ததாக கூறி மாமியார் வீட்டுக்கு போலீஸ்காரர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகள் தொடர்ந்து டிவி பார்த்ததால் ஆத்திரம் - மாமியார் வீட்டுக்கு நெருப்பு வைத்த போலீஸ்காரர்
x
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா. இவருக்கும் குளச்சல் பாலப்பள்ளத்தை சேர்ந்த அலெக்ஸ் ஜான்சன் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு 2 குழந்தைகள். கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்துள்ளார் அலெக்ஸ் ஜான்சன்.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன் பிள்ளைகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு ஆட்லின் ரிபா, தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். 

இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க வெட்டூர்ணிமடத்துக்கு வந்துள்ளார் அலெக்ஸ் ஜான்சன். அப்போது தன் பிள்ளைகள் 2 பேரும் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து நீண்ட நேரமாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். 

டிவியை நிறுத்துமாறு பலமுறை கூறியும் அவர்கள் தந்தையின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனிடையே தன் மனைவி ஆட்லின் ரிபாவிடம் வீட்டின் உள்ளே பேசிக் கொண்டிருந்துள்ளார் அலெக்ஸ். 

அப்போது குடிபோதையில் வந்த அலெக்ஸூக்கும் மனைவிக்கும் திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தன் மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு வெளியேறி இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்