சிதம்பரம் மற்றும் நாகூர் குளங்களின் சுற்றுச்சுவர் சீரமைத்து தரப்படும் - தமிழக அரசு

நாகூர் தர்கா குளத்தின் தடுப்பு சுவர் 5 கோடியே 37 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சிதம்பரம் மற்றும் நாகூர் குளங்களின் சுற்றுச்சுவர் சீரமைத்து தரப்படும் - தமிழக அரசு
x
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கனமழையால் சேதம் அடைந்த சுவரை சீரமைக்க, இஸ்லாமிய பெருமக்கள் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று 5 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் குளத்தின் தடுப்பு சுவர்கள் அரசு சார்பில் சீரமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோவில் குளத்தின் சுற்றுசுவர், 2 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து தரப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்