நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரம் - மாணவியும் தந்தையும் ஆஜராகாமல் தலைமறைவு

நீட் மதிப்பெண் முறைகேடு விவகாரத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் தலைமறைவு ஆகியுள்ளனர்.
நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரம் - மாணவியும் தந்தையும் ஆஜராகாமல் தலைமறைவு
x
நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்து நேர்காணலில் பங்கேற்றதாக ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி மற்றும் அவரது தந்தை பாலசந்திரன் ஆகியோரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அவர்களை தேடி தனிப்படை செல்லும் என போலீசார் தெரிவித்தனர். சென்னை, பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது சம்மனுக்கு இன்று ஆஜர் ஆகவேண்டும் என போலீசார் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை மாணவி தீக்க்ஷிதா, அவரது தந்தை பாலசுந்தரம் ஆஜராகவில்லை. இதனிடையே, போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த மாணவர் மீதும் காவல்துறையில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்