இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார்த்திக் தனது நண்பருடன் சென்னை வேளச்சேரிக்கு கட்டிட வேலைக்காக சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த கார்த்திக் என்பவரின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story