7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்

கொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
x
கொரோனா அதிகம் பாதித்த 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் பங்கே​ற்றனர். மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து 7 மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 63 சதவீதம் பேர் இந்த 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சஞ்சீவன் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், டெலிமெடிசன் சேவையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்