7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்
கொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கொரோனா அதிகம் பாதித்த 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து 7 மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 63 சதவீதம் பேர் இந்த 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சஞ்சீவன் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், டெலிமெடிசன் சேவையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Next Story