தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5ஆயிரத்து 569 பேருக்கு தொற்று உறுதியானது.
x
தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்  5ஆயிரத்து 569 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 66 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 46 ஆயிரத்து 453 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மேலும் 987 பேருக்கு கொரோனா 

சென்னையில் 987 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில்  4 ஆயிரத்து 582 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 979 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 8 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 9 ஆயிரத்து 966 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்