விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம் - போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மலை மீது மரத்தில் தூக்கு போட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் - பாண்டியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் இதயக்கனி. இவர், தன் அத்தை மகேஸ்வரியின் மகளான புனிதாவை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இருந்தபோதிலும் காதல் ஜோடிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இதயக்கனி மீது புனிதாவின் குடும்பத்தினர் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலைய சார்பு ஆய்வாளரான ஜெயகண்ணன், விசாரணைக்காக இதயக்கனியின் சகோதரர்கள் சந்தோஷ் மற்றும் ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்காக இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை, இந்த சூழலில் பெருமாள் குட்டம் மலைமீது இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கப் போவதில்லை என கூறிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்