ஜிஎஸ்டி நிலுவை தொகை - தமிழக எம்.பி.க்கள் கேள்வி - மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம்
தமிழகத்திற்கு 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் அளவிலான, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை, நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில், திமுக உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர், ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டத்தின் படி கடந்த 2019 ஏப்ரல் முதல் மார்ச் 2020 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கவேண்டிய தொகை வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூலில் இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள குறைவின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநிலங்களின் தனிப்பட்ட விருப்பப்படி இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
================
Next Story