பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர் - குழந்தை மீட்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைப்பு

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபரே, சாலையில் போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர் - குழந்தை மீட்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைப்பு
x
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபரே, சாலையில் போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வரட்டாறு பகுதியில்  குழந்தை அழுகை சத்தத்தை கேட்ட பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து  ரமேஷ் அரூர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி தமிழ்மணி, குழந்தையை மீட்டு, கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களிடம் ஒப்படைத்தார். இந்த பச்சிளங்குழந்தையை வீசி சென்றது யார்? காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்