தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் , 5 ஆயிரத்து 892 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
x
தமிழகத்தில்  80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் , 5 ஆயிரத்து 892 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று 92  பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.  6 ஆயிரத்து 110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுமார் 52 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் இன்று ஆயிரத்தும் குறைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இன்று ஒரே நாளில் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 924 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று கொரோனாவுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் மொத்தம் 12 ஆயிரத்து 59 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்