கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி

கொரோனாவால் உயிரிழந்த சென்னை ஆயுதப் படையை சேர்ந்த காவலர் நாகராஜன் குடும்பத்தினருக்கு,16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய், 2013 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்.
கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி
x
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே அம்மாபட்டியை சேர்ந்த 32 வயதான நாகராஜன், சென்னையிலுள்ள ஆயுதப்படையில் காவலாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில்,  மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.  வறுமையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில், 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக பேட்ஜ் காவலர்கள், சமூக வலைத்தளம் மூலம், 16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயை வசூல் செய்து, வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்