முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு - வரும் 24ஆம் தேதி தேர்வு - அதிர்ச்சியில் மருத்துவர்கள்

முதுகலை மருத்துவ தேர்வுகள், திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
x
முதுகலை மருத்துவ தேர்வுகள்,  திடீரென வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் முதுகலை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதுகலை மருத்துவர்கள் கொரோனா  தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்களால் தேர்வு எழுத முடியாது என்ற காரணத்தை கருதி, தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் திடீரென வரும் 24ம் தேதி முதல் அனைத்து முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டதால் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்