"பாஜக தலைமையின் கொள்கை,தொலை நோக்கு பார்வை..." - "இது குறித்து அறியாதவர்கள் மீதே எனது கோபம்" - மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்

பாஜக தலைமையின் கொள்கையையும், தொலை நோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாதவர்களை கண்டு, நியாயமான வருத்தமும் கோபமும் உள்ளதாக, அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையின் கொள்கை,தொலை நோக்கு பார்வை... - இது குறித்து அறியாதவர்கள் மீதே எனது கோபம் - மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்
x
பாரதிய ஜனதா கட்சியில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாக, நயினார் நாகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மாநில துணை தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மன வருத்தத்தில் இருப்பதாக கூறியிருப்பது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள, நயினார் நாகேந்திரன் தமது டிவிட்டர் பதிவில், கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு  பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக் குடுக்கைகளை கண்டு, நியாயமான கோபமும் வருத்தமும் தமக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார். பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிராகவே தமது கோபம் என்றும் நயினார் நாகேந்திரன் டிவிட்டரில் கூறியுள்ளார். 
=======

Next Story

மேலும் செய்திகள்