"விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்" - தமிழக அரசு அனுமதி - கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் - தமிழக அரசு அனுமதி - கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து விளையாட்டு மைதானங்களை மூட உத்தரவிட்ட அரசு, விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சியை தொடங்கலாம் எனவும் 15 வயதுக்குட்பட்டவர்களும் 50 வயதுக்கு அதிகமானவர்களும் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.பளுதூக்குதல், வில்வித்தை, பேட்மிட்டன், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடர்வதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மேற்கொள்ளும் பகுதிகளில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும்,  வெளிநாட்டு  பயிற்சியாளர்களின் உடல்நிலையை தொடர்ந்து கவனிக்கவும் வலியுறுத்தி உள்ளது. வீரர்களும், பயிற்சியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக், சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும், தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்