ஆவின் நிர்வாகத்தை கண்டித்து சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிர்வாகம் 40 சதவீதம் மட்டுமே வாங்கிக் கொண்டு 60 சதவீதத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சிறு குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிர்வாகம் 40 சதவீதம் மட்டுமே வாங்கிக் கொண்டு 60 சதவீதத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க மறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து செங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அவர்கள் சாலையில் பாலை ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர், இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
Next Story