சொத்துக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சொத்து தகராறில், தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்
x
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சொத்து தகராறில், தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆவட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன், குழந்தைவேல்  இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக வாக்குவாதம் முற்றிய நிலையில், குழந்தைவேலுவை, வெட்டிக் கொலை செய்த சாமிநாதன் போலீசில் சரணடைந்தார்.

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியில் பிரபல ரவுடி பாபு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இருசக்கர வாகன விபத்து- லிப்ட் கேட்டுச் சென்ற முதியவரும் பலி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் உட்பட இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் வியாபாரியான மோகன் என்பவர், முதியவர் ஒருவருக்கு லிப்ட் கொடுத்துச் சென்ற நிலையில், வாகனம் நிலை தடுமாறி  சாலையிலேயே விபத்தில் சிக்கியது. இதில், இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்